இரவு ஊரடங்கு மறுஉத்தரவு வரும் வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலம் முழுவதுமுள்ள தற்போதைய கொரோனா தொற்று பாதிப்புகளை ஆய்வு செய்த அரசு கொரோனா நிலையான வழிகாட்டுதல் செயல்முறையை திருத்தியுள்ளது. இந்த செயல்முறைகள் ஆகஸ்ட் 18 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது வீழ்ச்சியடைந்து வரக்கூடிய சூழலில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அசாம் மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நாளை (ஆக்ஸ்ட் 18) முதல் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
கோவையில் கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!
இந்த கட்டுப்பாடுகள் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கும் பொருந்தும் என அரசாங்க உத்தரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒரே இடத்தில 10க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட பகுதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நோய் தடுப்பு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் மருத்துவம், காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர மற்ற பகுதிகளில் தனியார் வாகனங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மக்களின் இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 25 பேர் வரை கலந்து கொள்ளவும், மத வழிபாட்டு தலங்களில் 20 பேர் வரை கலந்து கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் செயல்படவும், காய்கறி, மளிகை, பால், விலங்கு தீவனம் உள்ளிட்ட அவசியமான கடைகள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ரெஸ்டாரன்ட்கள், தாபாக்களில் 50% பேர் வரை அமர்ந்து உணவு உண்ணவும், வீட்டு விநியோகத்திற்கும், விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை தினசரி மாலை 6 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய ஊழியர்களுக்கு தடுப்பூசி அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர தனியார் அலுவலங்கள் தங்களது வசதிக்கேற்ப ஊழியர்களை அனுமதித்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.