தமிழகத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டு கொண்டாட தடை! முதல்வர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் இன்று (டிச.15) முதல் வரும் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு அன்று அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தடை அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதையடுத்து மீண்டுமாக ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? வெளியான முக்கிய தகவல்!
இதற்கிடையில் கொரோனா 2ம் அலைப்பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் இன்று (டிச.15) முதல் 31ம் தேதி வரை அடுத்த 16 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சத்திற்கு மத்தியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, புத்தாண்டு மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் கடற்கரைகள் முழுவதுமாக மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தேவையான அனுமதியைப் பெற்ற நிகழ்வுகளை மட்டும் அரசாங்கம் நடத்த அனுமதிக்கும். ஆனால் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் முறையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்களை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.