இன்று முதல் வார இறுதி ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!!!
சண்டிகரில் இன்று காலை 5 மணி முதல் மே 3ம் தேதி காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
சண்டிகரில் நேற்றைய நிலவரப்படி, 724 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,647 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 13 பேர் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர். 15 நாட்களுக்கு முன்னர் அங்கு வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த உத்தரவு நீக்கப்பட்டது. தற்போது அங்கு தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த வாரம் முதல் மீண்டும் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அதன்படி, சண்டிகரில் இன்று காலை 5 மணி முதல் மே 3ம் தேதி காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு செயல்படுத்தப்படும். மேலும், ஏப்ரல் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நேரத்தை மூன்று மணி நேரம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 29 முதல் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு நேரத்தில் மக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கால்நடையாகவோ அல்லது வாகனத்திலோ சாலையிலும், பொது இடங்களிலும் செல்லக் கூடாது என்று மாவட்ட பேரழிவு மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்-கம்-தலைவர் மண்டிப் சிங் பிரர் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கு நாட்களில் நகராட்சி சேவைகள், சுகாதாரம், மின்சாரம், தீயணைப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதைக் கையாளும் கடைகள் பிற்பகல் 2 மணி வரை வீட்டு திறந்திருக்க அனுமதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை ஏதும் இருக்காது. மேலும், ஏடிஎம்கள், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தொடர்புடைய மருத்துவ நிறுவனங்களும், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்றவை தொடர்ந்து செயல்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராங்கு போட்டு மக்கள சீக்கரம் கொன்னுடுவீங்க
Govt வேலை ல இருக்கறவன் வீட்டுல இருந்தாலும் காசு வரும்
மத்த மக்கள் என்ன பண்றது..
டேய் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா. நாசமா போறவங்களா
உரடங்ஞ உத்தரவு வேண்டும் எல்லையும் வழவைக்கனும்