இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில தலைமைச் செயலாளர் உத்தரவு!

0
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் - மாநில தலைமைச் செயலாளர் உத்தரவு!
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் - மாநில தலைமைச் செயலாளர் உத்தரவு!
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில தலைமைச் செயலாளர் உத்தரவு!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவலால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு உத்தரகாண்ட் அரசு திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலாளர் உத்தரவு:

கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் அடைந்த வகையான ஓமைக்ரான் வகை தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஓமைக்ரான் இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஜனவரி 31, 2022 வரை நீட்டித்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களையும் மாவட்ட மற்றும் உள்ளூர் மட்டங்களின் அடிப்படையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – புத்தாண்டு முதல் ஊதியம் அதிகரிப்பு?

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு உத்தரப் பிரதேச அரசு கடந்த முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தியது. அதில் சுகாதாரம், சுகாதார பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், தபால் சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்குச் சட்டத்தின் வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான உத்தரகாண்ட் அரசு நேற்று முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. அதன்படி இரவு ஊரடங்குச் சட்டம் டிசம்பர் 27ம் தேதி முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!

கோவிட் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து ஊரடங்கு உத்தரவின் போது தனியார் வாகனங்களுக்கும் அவசர தேவைகளுக்கு பயணிக்க அனுமதி உண்டு என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு 200 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்காக விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் முனையங்களில் அதிக விழிப்புணர்வை மேம்படுத்தியுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்கள் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!