தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து – கடைகள் செயல்பட அனுமதி!
தமிழகம் முழுவதும் வரும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள காரணத்தால் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 24 முதல் இ-பதிவில் புதிய நிபந்தனைகள் – அரசு அறிவிப்பு!!
மற்ற கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை நடத்தியது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, வரும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாக்கப்பட உள்ள நிலையில், இன்றும் (மே 22) நாளையும் (மே 23) அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்களுக்கு அனுமதி கிடையாது என்று அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.