தமிழகத்தில் அனைத்து கடைகளும் 7 நாட்கள் மூடல் – அரசு உத்தரவு!!
தமிழகம் முழுவதும் மே 24 முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் 7 நாட்களுக்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதி கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
7 நாள் முழு ஊரடங்கு :
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால் தமிழக அரசு நோய் தடுப்பு பணிகளை விரைவாக செய்து வருகிறது. மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு மையங்களை அமைத்து மக்களை தொற்றிலிருந்து காக்க அரசு தொடர்ந்து முயற்சி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக முதல்வர் மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவி மற்றும் மருந்து கடைகள் தொடர்ந்து இயங்கும் மேலும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த ஊரடங்கு மே 24 உடன் முடிவடையும் நிலையில் தற்போது மேலும் 7 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களுக்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்காது. ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மே 22, 23 ஆகிய இரு தினங்களில் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பேருந்து சேவைகளும் இரு தினங்களும் இயங்கும் என தெரிவித்துள்ளது.