தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை காலை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது, அதனால் சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டன.
ஈரோடு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் மாத மின்கட்டணம்!
இந்நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைவாக உள்ள மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. மேலும் வழிபாட்டு தலங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் அதனை திறக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஜூன் 28ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார். அதில் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மருத்துவ குழுவினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.