தமிழகத்தில் படிப்படியாக அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

0
தமிழகத்தில் படிப்படியாக அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் படிப்படியாக அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் படிப்படியாக அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

இந்தியாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொரோனா 3 ஆம் அலை உச்சம் அடையும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தமிழகத்தில் தளர்த்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டுமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இப்போது தான் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய பாதிப்புகள் மீண்டுமாக பெருகி வருகிறது. தமிழகத்தை பொருத்தளவு 1,500 ஆக குறைந்து வந்த புதிய பாதிப்புகளானது தற்பொழுது மீண்டுமாக அதிகரித்துள்ளது. அதாவது நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு நாளில் மட்டும் 1,908 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 203 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு, மக்கள் அதிகம் கூடும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் கலை பாடப் பிரிவிற்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமனம்?

அந்த வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா புதிய பாதிப்புகள் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருக்கும் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் அல்லது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சென்னை, கோவை உட்பட சில நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தளவு மக்கள் அதிகம் கூடும் திநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் வணிக தலங்கள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலும் நேற்று (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள், பேக்கரிகள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மீன், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை மத வழிபாட்டு தலங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளை மீறியும் கொரோனா பரவல் பாதிப்புகள் உயர்ந்து வந்தால், தமிழகத்தில் மீண்டுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!