அக்.21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
அக்.21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் - மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அக்.21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் - மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அக்.21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மணிப்பூர் அரசு கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 21ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு:

மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து உள்ளது. இதனால் மாநில அரசு முன்னதாக அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை குறைந்தும், கூடுதல் தளர்வுகளை அளித்தும் ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவரும் அரசின் புதிய வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

  • மணிப்பூர் மாநில அரசு உத்தரவின் படி, இரவு ஊரடங்கு இரவு 8:30 மணி முதல் காலை 4 மணி வரை தொடரும்.
  • அரசு அறிவித்துள்ள கோவிட் -19 தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சமூக கூட்டங்கள் அனுமதிக்கப்படும்.
  • முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் 50% மக்களுடன் மத வழிபாட்டுத்தலங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை – முதல்வர் தொடக்கி வைப்பு!

  • அனைத்து செயலகத் துறைகள், மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மெய்நிகர் முறை அல்லது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் நேரடியாக அலுவலகத்திற்கு அனைத்து ஊழியர்களும் வரலாம்.
  • உள்ளூர் காய்கறி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • உள்ளூர் மளிகைக் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தங்க பஜார் மற்றும் மசூதி சாலையில் உள்ள மொத்த மளிகை கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
  • தங்கல் மற்றும் பவுனா பஜாரில் பள்ளங்கள்/வழித்தடங்களில் உள்ள கடைகளைத் தவிர, அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம்.
  • உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிட் -19 தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
  • பேருந்தில் 50 சதவீதத்திற்கு மிகாமல் பயணிகளுடன் பொதுப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
  • அனைத்து பயணிகள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களும் வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!