அக்.18 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர முடிவு செய்த அரசாங்கம், இன்று (அக்.4) முதல் இன்னும் 15 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலை நோய் தொற்று குறைந்திருக்கும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் ஹரியானா மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இன்னும் 15 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில செயற்குழு தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் விஜய வர்தன் கூறுகையில், ‘ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 4 முதல் 18ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 180 பேர் உயிரிழப்பு!
இதற்கிடையில் அம்மாநிலத்தில் குடியிருப்பு பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முறையான கொரோனா வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்பட அனுமதிக்கப்பட்டன. ஆனால் திடீரென முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்புகளை தொடருமாறு அரசு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியது. இருப்பினும், தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு 100% வருகையை அரசாங்கம் அனுமதித்துள்ளது.
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு – தீபாவளி பண்டிகை எதிரொலி!
அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, நோய் தடுப்பு சுத்திகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளில் கூட்டங்களின் போது கொரோனா நெறிமுறையை பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.