புதுச்சேரியில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பேருந்து சேவைகள் தொடக்கம்!
மத வழிபாட்டு தளங்கள் திறக்கவும், பஸ், டாக்ஸி, ஆட்டோ இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகள் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 14 முதல் 21 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நேற்றுடன் இந்த கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தளர்வுகளாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு 100 பேருடன் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும், அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.