நாகாலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு தளர்வுகள் அமல் – முழு விவரங்கள் வெளியீடு!
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூலை 11 முதல் 17 ம் தேதி வரையுள்ள ஏழு நாட்களுக்கு இரண்டாம் கட்ட தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ம் அலை பாதிப்பானது தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில், முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளித்து நாகலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அம்மாநிலத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே மாத தொடக்கத்தில் இருந்து நீட்டிக்கப்பட்டு வந்து ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வரிடம் நேரடி கோரிக்கை!
இதற்கிடையில் நாகலாந்தில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவிகிதமாக குறைந்துள்ளதால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு ஆலோசித்து வந்தது. இது குறித்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் குழுவில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும், புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த அடிப்படையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ரயில் சேவைகள் இயக்கம் மீண்டுமாக துவங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதற்கான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.