முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை தொற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிப்பதாக கோவா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
மாநிலம் தழுவிய கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டித்து கோவா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் பேரலையாக உருவான கொரோனா 2 ஆம் அலை தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவாவில் மே மாதம் 9 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனிடையே கோவாவின் கடலோர பகுதிகளில் உள்ள தொற்று நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வு வயது குறைப்பு மறுபரிசீலனை – அரசுக்கு கோரிக்கை!
அந்த வகையில் தற்போது மாநிலம் தழுவிய பொது முடக்கமானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், கோவா மாநில அரசு கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 26 வரை நீட்டித்தது. இருப்பினும் 50% திறன் கொண்ட பார்கள் மற்றும் உணவகங்களைத் திறக்கவும், 50% திறனுடன் ஜிம்களை திறக்கவும், 15 பேர் வரை கூடும் மத வழிபாட்டு தலங்களை திறக்கவும் மாநில அரசு அனுமதி அளித்தது.
TN Job “FB Group” Join Now
தவிர கடைகள் மற்றும் மால்கள் தினசரி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று (ஜூலை 25) ஒரு நாளில் 149 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,158 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.