ஆகஸ்ட் 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்ட மேற்கு வங்க அரசு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்து வரும் சூழலில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் புதிய பாதிப்புகள் மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதுமான கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. எனினும் பொது முடக்க காலத்தில் அவசரகால மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆணையர் உத்தரவு!
தொடர்ந்து மாநிலம் முழுவதும் தினசரி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளில், கடைகள் மற்றும் சந்தைகளின் இயக்க நேரங்களுக்கு எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அதாவது காய்கறி சந்தைகள் காலை 6 மணி முதல் மதியம் வரை திறந்திருக்கும். அதே நேரத்தில் ஜிம்கள் மற்றும் சலூன்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் அனுமதியுடன் திறந்திருக்கும்.
TN Job “FB Group” Join Now
மேலும் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் செயல்படலாம் என அரசாங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது தவிர திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.