ஆகஸ்ட் 23 முதல் பள்ளிகள் திறப்பு, இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா காலத்திற்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்டது. ஆரம்ப கடத்தினுள் இருந்து மாநிலத்தில் அதிக அளவிலான மக்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் மாநில அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தீவிரப்படுத்தியது. இதன் விளைவால் மெல்ல மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அரசு ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
கல்வி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகஸ்ட் 23 முதல் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா தொற்றின் 3ம் அலை மற்றும் அதன் தீவிரத்தை பொறுத்து ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை தொடங்குவது பற்றி மாநில அரசு முடிவெடுக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கேரளாவை ஒட்டியுள்ள அனைத்து கர்நாடகா மாவட்டங்களிலும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். தற்போது மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆனால் இனி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதன் மூலம் முன்னர் இருந்ததை விட இரவு ஊரடங்கு மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.