செப்.20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

0
செப்.20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
செப்.20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
செப்.20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

கோவா மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளானது வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் கூடுதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா 3 ஆம் அலை பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்திலும் கடந்த மே மாதம் 9 ஆம் தேதி முதல் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தில் கிட்டத்தட்ட அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் – நாளை வெளியீடு!

இதற்கிடையில் கோவாவில் நேற்று (செப்டம்பர் 13) ஒரு நாளில் மட்டும் 38 புதிய வழக்குகள் மற்றும் 1 இறப்பு பதிவாகியுள்ளது. தற்போது செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை, பார்கள் மற்றும் உணவகங்கள், ஜிம்கள் 50% திறனில் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டு தளங்களில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ளவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள், விளையாட்டு வளாகங்கள், சினிமா அரங்குகள் 50% திறனில் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, திருமண விழாக்களில் 50% திறனுடன் அனுமதிக்கப்படுகிறது. எனினும் கேசினோக்கள், ஆடிட்டோரியங்கள், சமூக அரங்குகள், நீர் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், பள்ளிகள், அனைத்தும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானங்கள் – முதல்வர் அறிவிப்பு!!

இதனிடையே கேரளாவில் இருந்து வரும் மக்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஐந்து நாள் கட்டாய தனிமைப்படுத்தலுடன் எதிர்மறையான RT PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள், சுகாதாரப் பணியாளர்கள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மரணம் அல்லது மருத்துவ அவசர நிலை காரணமாக கோவா வருபவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!