தமிழகத்தில் ஆகஸ்ட் 23 க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வகை கட்டுப்பாடுகளை மேலும் சில தளர்வுகளுடன் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 20) ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு ஆலோசனை
கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்திருந்த ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 20) ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி – ஐசிஎம்ஆர் தகவல்!
அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அரசு ஏற்கனவே அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட கொரோனா புதிய பாதிப்புகளினால் மீண்டுமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பில் மாவட்டங்கள் தோறும் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் மத வழிபாட்டு தலங்களை மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 20) காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போல செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கவும், தியேட்டர்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்கவும் அனுமதி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) ஒரு நாளில் மட்டும் 1,797பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.