இந்தியாவில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!
நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் 27 மாவட்டங்கள் அதிக கோவிட் பாசிட்டிவிட்டி விகிதங்களை பதிவு செய்துள்ள நிலையில், எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் மற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பரிந்துரை:
நாட்டில் கோவிட்-19 தொற்று பரவல் பாதிப்புகள் குறைந்து இயல்பு திரும்பி வந்த நிலையில், தற்போது மீண்டும் பல மாநிலங்களில் பரவலாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால் மாநிலங்களில் ஆரம்ப கட்டத்திலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாநிலங்களில் உள்ள எட்டு மாவட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களில் 10 சதவீதத்திற்கு மேல் நேர்மறை விகிதங்கள் பதிவு செயயப்பட்டுள்ளது. ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 மாவட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை நேர்மறை விகிதங்களைப் பதிவு செய்து வருகின்றன. எனவே, இந்த 27 மாவட்டங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு – புத்தாண்டில் ஹாப்பி நியூஸ்!
கடந்த இரண்டு வாரங்களில் அதிக கோவிட் நேர்மறை விகிதத்தை பதிவு செய்யும் மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள்/நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருந்தார். கொரோனா தொற்று சோதனை நேர்மறை விகிதம் அல்லது படுக்கையில் தங்கும் விகிதம் அடிப்படையிலான கட்டமைப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழிகாட்டுதல்களின்படி மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு நிலைமையை கண்டிப்பான கண்காணிப்பை பராமரிக்க வேண்டியது அவசியம்.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
ஆக்சிஜன் சப்போர்ட் அல்லது ICU படுக்கைகளில் 10 சதவிகிதம் அல்லது 60 க்கும் அதிகமான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒன்றிணைவதைக் கட்டுப்படுத்துதல், கூட்டங்களைத் தடை செய்தல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும், அனைத்து இடங்களிலும் நேரங்களிலும் கோவிட் தடுப்பு நடவடிக்கை கண்டிப்பாக கடைபிடிப்பது செயல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.