தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!

0
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் - கொரோனா பாதிப்பு எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் - கொரோனா பாதிப்பு எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!

கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த கொரோனா, மீண்டும் தீவிரமாக தமிழகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இப்படி கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு மையம்:

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தினசரி பாதிப்பு 2000க்கும் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுக்கூட்டம், திருவிழா, திருமணம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லுாரி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடித்து, ‘மாஸ்க்’ அணிய வேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ‘மாஸ்க்’ அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிர வேகமெடுத்துள்ளது. மேலும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் 17 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 7 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 9 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

மேலும் 154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களுக்கும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – விலை குறித்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா விஸ்வரூபம் எடுத்து உள்ள இந்த நிலையில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை மக்கள் மறந்து விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து மக்களும், அரசு அலுவலர்களும் விலகி நிற்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!