சென்னையில் 11 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பல மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 11 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனாவின் அலைகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் இந்த சூழ்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் தொற்றின் பிஏ 5 வகை தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் அது அதிகம் பரவும் தன்மையுடன் இருக்கிறது. எனவே,தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் அந்த மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கு மேல் பதிவாகி இருக்கிறது.
Flipkart நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை – முழு தகவல்களுடன்..!
சென்னையில் தினமும் 400க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 11 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.