கொரோனா இழப்பீட்டு தொகைக்கு வருமான வரி விலக்கு – மத்திய அரசு!
கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமான வரி:
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் நாட்டில் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் அவர்களின் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் நிறுவனங்கள் உதவி தொகையை வழங்கி வருகிறது. தற்போது மக்களுக்கு மத்திய அரசு ஓர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவி தொகைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? எதிர்பார்ப்பு!
அதன்படி ரூ.10 லட்சம் வரையிலான உதவி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டாம் என்றும் அதற்கு மேல் வழங்கப்படும் உதவி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருமான வரி தொடர்பான குறைதீர் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட வேண்டிய தொகைக்கான அவகாசம் ஆகஸ்ட் 31 வரையிலும், அத்தொகையை வட்டியுடன் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வரி பிடித்ததற்கான விண்ணப்ப படிவத்தை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக நிறுவனங்களுக்கு ஜூலை 15 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வீடு வாங்குபவர்களுக்கான வரி விலக்கு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.