இனி கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு சட்டப்பேரவை அலுவலகத்தில் அனுமதியும் மறுக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அறிவித்தது. மேலும் பல்வேறு நோய் தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இரண்டு டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
LPG சிலிண்டர் மானியம் வரவில்லையா? சரிசெய்வதற்கான வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சட்டப்பேரவை அலுவலகத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் சட்டப்பேரவை அலுவலகத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கனவே புதுச்சேரி சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணம் எல்லா இடங்களிலும் கட்டாயம் கேட்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.