தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 18,936 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இறப்பு விகிதம், சிகிக்சை பெறுவோர் விகிதம் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. ஒரு புறம் உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று நம் வாழ்வோடு ஒன்றியது இனி கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட் புக் எப்போது? பெற்றோர்கள் கோரிக்கை!
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நிலைக்கு உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய இடங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,671 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 844 பேரும், செங்கல்பட்டில் 465, திருவள்ளூரில் 161 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,98,992 ஆக அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் நேற்று ஒரே நாளில் 2,516 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,028 ஆகவும் உள்ளது. அதனை தொடர்ந்து 18,687 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நான்காம் அலை தாக்கம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.