இந்தியாவில் ஒரே நாளில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 295 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 295 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.34 கோடியை எட்டியுள்ளது. கொரோனாவை ஒழிக்கும் முயற்சியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 3,77,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 80,85,68,144 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொது சேவை மையம் அறிவிப்பு!
தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை. நேற்று மட்டும் புதிதாக 295 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்ததுள்ளது. இந்த நிலையில் மூன்றாம் அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இது 18 கீழ் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!
அதனை தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நேற்று ஒரே நாளில் 43,938 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். நாட்டில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,15,105 ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,18,181 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.95% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.