இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 33,376 பேருக்கு தொற்று! 308 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 308 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 33,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,08,330 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தொற்று முழுமையாக குறையவில்லை. கடந்த ஒரு மாதமாக 40 ஆயிரத்திற்குள் பாதிப்புகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிரடி வீழ்ச்சி – இன்றைய விற்பனை!
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 308 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் மொத்தமாக இதுவரை 4,42,317 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 73,05,89,688 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பேராயுதமாக கருதப்பட்ட நிலையில் தற்போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த தகவல் மக்களிடையே மேலும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது மூன்றாம் அலை அறிகுறி என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. அதனை தொடர்ந்து ஒரே நாளில் 32,198 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,37,4497 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 39,151 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.