இந்தியாவில் ஒரே நாளில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 180 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் மட்டும் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 180 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரம் எடுத்து பரவி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக இருந்தது. தற்போது அரசின் முயற்சியாலும் மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் தொற்று குறைந்து வந்தாலும் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தபடவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,34,702 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு – தீபாவளி பண்டிகை எதிரொலி!
அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் நோய்த்தடுப்பு பணியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 23,46,176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு – இனி பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்! அரசு ஏற்பாடு!
மேலும் இதுவரை 90,79,32,861 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை உயிரிழப்பில் இருந்து தடுக்க முடிகிறது. இந்த நிலையில் தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 26,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,31,21,247 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.89% ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,64,458 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.