இந்தியாவில் ஒரே நாளில் 640 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 43,654 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்புகள் முழுமையாக குறைந்தபாடில்லை.
பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைன் வகுப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!
தடுப்பூசிகள் 100% செலுத்தி முடிக்கப்பட்டால் தான் தொற்று முழுமையாக குறையும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 44,61,56,659 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மத்திய சுகாதாரத்துறை இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 640 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,22,022 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 43,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 3,14,84,605 ஆக உள்ளது. 3,99,436 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,06,63,147 ஆக உயர்ந்துள்ளது மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.