இந்தியாவில் ஒரே நாளில் 42,015 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,998 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டு தீ போல அதிவேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை எதிர்பாராத அளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதனால் நாடெங்கும் மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன. முதல் அலை கொரோனா வயதானவர்களை குறி வைத்து தாக்கியது. ஆனால் இரண்டாம் அனைத்து வயதினரையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்குகளை அமல்படுத்தி உள்ளன.
EPFO சந்தாதாரர்களுக்கு 8.5 சதவீத வட்டி டெபாசிட் – வெளியான தகவல்!
மேலும் அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தடுப்பு பணியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 41,54,72,455 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.12 கோடியாக அதிகரித்துள்ளது. தினந்தோறும் மத்திய சுகாதாரத்துறை இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,015 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,16,377 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து ஒரே நாளில் 36,977 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நடப்பு மாதத்தில் பாதிப்புகள் குறைந்த போதிலும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. புதிதாக 3998 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,18,480 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 4,07,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.