தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா உறுதி – 409 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18,023 பேருக்கு புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது நன்கு குறைந்து வருகிறது. மொத்த கடந்த 24 மணிநேர பாதிப்புகள் நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நாளில் 18,023 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்னர். இதனால் மொத்த பாதிப்பு 22,74,704 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 409 பேர் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு – நீதிமன்றம் உத்தரவு!
தொற்று பாதிப்பில் இருந்து 31,045 பேர் இன்று குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 20,28,344 பேர் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னை மாநகரில் இன்று ஒரே நாளில் 1437 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5,19,574 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்று மட்டும் 1,70,112 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2,90,62,609 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலையில் தமிழகத்தில் 2,18,595 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 271 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், 69 அரசு மையங்களும், 202 தனியார் மையங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.