மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா பாதிப்பு – இன்றைய பாதிப்பு ரிப்போர்ட்!
இந்தியாவில் இன்று கொரோனானால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை குறித்தான அறிவிப்பினை தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
கொரோனா பாதிப்பு
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்ற நோய் தொற்று உருவாகி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும். இதில் இருந்து இந்தியாவும் விதி விலக்கு கிடையாது என்று தான் கூற வேண்டும். கடந்த இரு மாதங்களாக எந்த வித பாதிப்பும் பெரிதாக இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடருமா? மின்சார துறை முழு விளக்கம்!
இன்று காலை 9 அளவில் வரை பதிவான நிலவரப்படி, புதிதாக 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று பதிவான எண்ணிக்கையில் மொத்தமாக 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் 47,945 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அவ்வப்போது குறைந்து வந்தாலும் இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை என்று WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை பொது மக்கள் கவனம் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்