நாடு முழுவதும் திடீரென வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 5000+ பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அனைத்து வகையான தொழிற்துறைகளும் வணிகத்துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் கொரோனாவின் 4ம் அலை ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரை அதிரடி உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!
அந்த வகையில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடைய செய்கிறது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தொற்று அதிகம் பரவி வரும் 5 மாநிலங்களை கண்டறிந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 7 போ் உயிரிழந்துள்ளதாகவும் அதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,24,715 ஆக உயா்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.