இந்தியாவில் புதிதாக 499 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல் !!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 499 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையின் போது தப்பித்த இந்தியா இரண்டாம் கொரோனா அலையில் சிக்கிக் கொண்டது. முதல் அலை பாதிப்புகள் குறைந்த பிறகு மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றததாலும், இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலை நடத்தி அலட்சியம் காட்டியததாலும் தான் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சமூகநலவாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தாண்டு கொரோனா பரவலில் இந்தியாவில் வட மாநிலங்கள் அதிக பாதிப்படைந்துள்ளது.
3ஆவது அலை வந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு – மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை !!
நாடெங்கும் உயிரிழப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுகிறது. தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கை பிறப்பித்து தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.14 லட்சத்தை தாண்டியுள்ளது. தினசரி மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு நிலவரத்தை சேகரித்து வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 ,மணி நேரத்தில் இந்தியாவில் 38,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 499 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,14,108 ஆக உயர்ந்தது. அதனை தொடர்ந்து 38,660 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,08,456 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,21,665 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு புறமாக தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 40,64,81,493 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.