இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9,436 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 9,436 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 9,436 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9,436 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மேலும் தினசரி ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவி வந்த கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் தொற்று குறைந்து கடைகளும், பள்ளிகளும், வேலை நிறுவனங்கள் போன்றவைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து நாட்டில் குரங்கு அம்மை என்னும் நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றம் – செயலாளர் உத்தரவு!

இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொற்று குறைந்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனாவின் அடுத்த அலை தொடங்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து 15,220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது வரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,37,93,787ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 86,591 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,27,754 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,93,787 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.62% உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் 2,11,66,35,408 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 26,53,964 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!