இந்தியாவில் மேலும் 1,45,384 பேருக்கு கொரோனா – 794 பேர் உயிரிழப்பு!!

0
இந்தியாவில் மேலும் 1,45,384 பேருக்கு கொரோனா - 794 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் மேலும் 1,45,384 பேருக்கு கொரோனா - 794 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் மேலும் 1,45,384 பேருக்கு கொரோனா – 794 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1.45,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று:

இந்தியாவில் கொரோனா அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பல தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. மேலும் தகுதியுடைய மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,32,05,926 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 794 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,436 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் கொரோனா தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 77,567 பேர் குணமாகியுள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 10,46,631 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி சுமார் 9,80,75,160 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!