இந்தியாவில் ஒரே நாளில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று – 1,167 பேர் பலி!!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா தொற்று, மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விளைவாக தற்போது வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து உள்ளது. அதன்படி கடந்த 91 நாட்களில் கண்டிராத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 42,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்றால் 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 3,89,302 ஐ எட்டியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 81,839 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 6,62,521 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.