இந்தியாவில் ஒரே நாளில் 91,702 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகாதாரத்துறை!
இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91,702 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் மாதங்களாக கொரோனா தொற்று 2வது அலை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீரியம் குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதை தொடர்ந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை – அறநிலையத்துறை நாளை ஆலோசனை!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91,702 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,92,74,823 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு 3,403 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,63,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து 1,34,580 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,77,90,073 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 11,21,671 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதன் எதிரொலியாக நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,60,85,649 ஆக அதிகரித்துள்ளது.