இந்தியாவில் ஒரே நாளில் 783 பேர் உயிரிழப்பு – 44,111 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் புதிதாக 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 783 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடந்த சில வாரமாக வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உயிரிழப்பு மற்றும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதேபோல் நாட்டில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக மின்வாரியத்தில் பணியிட மாற்றம் – ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க உத்தரவு!
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,05,02,362 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி 738 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,01,050 ஐ எட்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 57,477 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,96,05,779 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது நாட்டில் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி 4,95,533 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 34,46,11,291 ஆக அதிகரித்துள்ளது.