இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்புகள் – நிம்மதியில் மக்கள்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இன்றளவும் இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பல்வேறு தரப்பினரும் தங்களது பொருளாதார நிலையை சீர்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலைமை தற்போது தான் சற்று மாறி உள்ளது என்றே கூறலாம்.
Follow our Instagram for more Latest Updates
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 830 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,45,768 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,981 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,95,180 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 21,607 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று (அக். 27) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
Exams Daily Mobile App Download
செயலில் உள்ள மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 0.05 சதவிகிதம் ஆகும். தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.77 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.