சென்னைவாசிகள் கவனத்திற்கு! செப்.19 இல் 1,600 தடுப்பூசி முகாம்கள் – மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் 19ம் தேதி 1,600 தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்தது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பு பணியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பயன்பட்டால் வைரஸ் பரவல் எதிர்பார்த்த அளவு குறைந்து வருகிறது. இதனால் விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி முற்றிலும் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் தொடங்கிய 3வது அலை – ஒரே நாளில் 34,403 பேருக்கு கொரோனா! 320 பேர் உயிரிழப்பு!
அதன்படி கடந்த வாரம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்கு மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் சென்னையில் 1,88,080 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த நிலையில் இனி தமிழகம் முழுவதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு இம்மாதம் அறிவிப்பு – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
அதன்படி வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசியை செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வார இறுதி நாட்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம் மூலம் பணிக்கு செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தடுப்பூசி செலுத்த எதுவாக உள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.