இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா – 3,523 பேர் பலி!!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒரே நாளில் 4,01,993 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,523 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தது போல இந்தியாவில் நோய் தாக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 4 லட்சம் வரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தவிர கொரோனா தாக்கத்தால் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகளும், மத்திய அரசும் திணறிக்கொண்டிருக்கிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!!
இந்நிலையில் கடந்த ஒரு நாளில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்ததுள்ளது. நேற்று ஒரு நாளில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றிலிருந்து ஒரே நாளில் 2,99,988 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 32,68,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.84% ஆகவும், உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆகவும், சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 17.06% ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 15,49,89,635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.