இந்தியாவில் ஒரே நாளில் 81,466 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் நாட்டில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,87,89,138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,71,242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 81,446 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,23,03,131 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 469 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,63,396 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 50,356 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!!
இதன்மூலம் நாட்டில் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,25,039 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 6,14,696 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்தவர்களின் விகிதம் 93.89% ஆகவும், உயிரிழந்தவர்களின் விகிதம் 1.33% ஆகவும் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 4.78% ஆகவும் அதிகரித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்