இந்தியாவில் ஒரே நாளில் 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை தகவல்!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,31,968 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
இந்தியாவில் தற்போது கொரோனா நோய் பரவல் வேகமெடுத்து வருவதால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிற்பக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை குறைப்பதற்காக சுகாதாரத் துறையினர் மிக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1,31,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,60,542 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 780 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,67,642 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து 61,899 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி – மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!!
இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,13,292 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 9,79,608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 9,43,34,262 பேருக்கும் அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,91,511 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 91.22%, உயிரிழந்தவர்களின் விகிதம் 1.28% மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 7.50% ஆக அதிகரித்துள்ளது.