தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா – அமைச்சரின் விளக்கம் இது தான்!
சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சுகாதாரத்துறை முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பிறகு அரசு பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதனால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருகின்றனர். ஆனாலும் தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அணைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் குரங்கு அம்மை நோய் பரவ ஆரம்பித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய குரங்கு அம்மை நோய் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருவதாக தகவல் வந்ததை அடுத்து தமிழகத்திலும் இதற்கான தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதாவது தமிழக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது. வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்புகள் மீண்டும் தமிழகத்தில் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னை தி.நகர் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் மாதம் 1,000 ரூபாய்!
இது குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு இதுவரை இல்லை. அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொற்று பாதிப்பு எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். சுகாதரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை மிகுந்த கவனத்துடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.