கொரோனா 4வது அலை, முகக்கவசம் & சமூக இடைவெளி கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!

0
கொரோனா 4வது அலை, முகக்கவசம் & சமூக இடைவெளி கட்டாயம் - மாநில அரசு உத்தரவு!
கொரோனா 4வது அலை, முகக்கவசம் & சமூக இடைவெளி கட்டாயம் - மாநில அரசு உத்தரவு!
கொரோனா 4வது அலை, முகக்கவசம் & சமூக இடைவெளி கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!

கொரோனவின் பிறப்பிடமான சீனாவில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா மீண்டும் தலைதூக்கி உள்ளதால், டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கட்டாயமாக்கி கர்நாடக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்:

நாடு முழுவதும் கொரோனா 3 வது அலை ஓய்ந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்து வரும் இந்த சூழலில் இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காம் அலை எழக்கூடும் என கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சீனாவில் கடந்த சில வாரங்களாக புதிய வகை கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து உள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் கர்நாடகாவில் நான்காம் கொரோனா அலைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியைப் பராமரிப்பதையும் கட்டாயமாக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை கர்நாடகாவில் கொரோனா நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாநில கொரோனா தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் நடத்தினாா். இந்த ஆலோசனை கூட்டத்தில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியை பராமரிப்பதையும் கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த முடிவுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகா் செய்தியாளர்களிடம் கூறியது, பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், உள் அரங்கங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் எதுவும் விதிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் சுகாதார அமைச்சா்களின் காணொலிவழி ஆய்வுக் கூட்டத்தை பிரதமா் நாளை நடத்துகிறாா். அக்கூட்டத்தில் கூடுதலாக பல வழிகாட்டுதல்கள், தகவல்கள் பற்றி ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!