இந்தியாவில் மீண்டும் கொரோனா 4ம் அலை? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 18,313 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா என்னும் கொடிய நோய் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கையினை இழந்து மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. மேலும் நோயினை கட்டுப்படுத்த ஊரடங்கு, பொது முடக்கம், போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் நோயின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் நோய் பரவும் வீரியத்தை குறைக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த தடுப்பூசி பலவகையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பினால் தொற்றின் வீரியம் கட்டுக்குள் வந்தது. கொரோனாவின் முதல் அலையின் தாக்கம் குறைய தொடங்கிய சில நாட்களுக்குள் இரண்டாம் அலை பரவ தொடங்கியது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகினர். தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் நான்காம் அலை ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல் பாதிப்பும் 4 கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நிலவரத்தில் கொரோனாவால் புதிதாக 18,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் புதிதாக 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,167 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து ஒரே நாளில் 20,742 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,32,67,571 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது. மற்றும் உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.இந்தியாவில் இதுவரை 1,45,026 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2,02,79,61,722 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 27,37,235 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.