அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாவது அலை உச்சம் பெறும் – ஆய்வறிக்கையால் மக்கள் அச்சம்!
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை உச்சம் தொடலாம் என்ற அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா 3வது அலை:
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. மேலும் இந்த வைரஸ் முதல் அலையின் போது இருந்ததை விட தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதனை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தியதன் விளைவாக கொரோனா தொற்று பரவல் என்பது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைப்பு – இன்றைய விலை நிலவரம்!
மேலும் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கில் சில தளர்வுகளையும், பல கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் விதித்து வந்தது. இந்த நிலையில் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தும் பணியில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க மத்திய அரசிடம் தடுப்பூசி வழங்குதலை அதிகப்படுத்துமாறு கோரிக்கையும் வைக்கப்பட்டது. தற்போது இந்த பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்து மூன்றாம் அலை தொடங்க இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த மூன்றாம் அலையானது அடுத்த மாதம் அக்டோபரில் உச்சம் தொடலாம் என்ற அதிர்ச்சி அறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை மையமானது பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளது. மேலும் இந்த தொற்று பரவல் என்பது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குதலை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது. இதுவரை நாட்டில் 58,25,49,595 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.