தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவல்? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3ம் அலை பாதிப்புகள் வந்தால் அதனை எதிர்கொள்வது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.
கொரோனா 3ம் அலை:
கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பூஞ்சை நோய்களும் அச்சத்தை உண்டாக்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 14 வரை தடை நீட்டிப்பு – அரசு உத்தரவு!
அப்போது, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலையை தொடங்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை 1.01 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. மேலும், 91,75,000 பேர்களுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
3ம் அலை பாதிப்புகள் தமிழகத்தில் வரக் கூடாது. மீறி பாதிப்புகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான சிகிச்சை கட்டமைப்புகளை உண்டாக்குவோம். தற்போது 50,000 கோவாக்ஸின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு புதிதாக வந்துள்ளது. கொரோனா 3ம் அலையை எதிர்கொள்வதற்கு தேவையான மருந்துகள் தற்போது தமிழகத்தில் இல்லை என்பது தான் உண்மையான சூழல் என தெரிவித்துள்ளார்.