இந்தியாவில் முடிவுக்கு வந்த கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்! மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது பல்வேறு மாநிலங்களில் குறைய தொடங்கியுள்ளது. அதனால் மாநிலங்களில் 3ம் அலையின் தாக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கலாம் அல்லது தளர்வுகளை அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறைவு
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை கொரோனவனா ஓமைக்ரான் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது.
தமிழகத்தில் முடிவுக்கு வந்த தேர்தல் பிரச்சாரம் – நாளை மறுநாள் (பிப்.19) பொது விடுமுறை!
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் உள்ள எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டது.
அத்துடன் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் 3ம் அலையின் தாக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கவோ அல்லது கூடுதல் தளர்வுகளை அளிக்கவோ மத்திய அரசு மாநில அரசுகளுக்கு மத்திய அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதில் பயணிகள் ஏழு நாட்கள் தங்களை கட்டாய தனிமைப்படுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.