இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடங்கி விட்டது – அலர்ட் ரிப்போர்ட்!
ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா அவர்கள் நாட்டில் முன்னதாகவே கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டதாகவும், பாதிப்பு மோசமடைய தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3ம் அலை:
கொரோனா 2ம் அலை இந்தியாவில் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மற்றும் ஜூன் மாதத்தில் உச்ச கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூலை மாத தொடக்கத்தில் தான் சற்று பாதிப்பு குறைந்தது. இருப்பினும் கொரோனா 2ம் அலையினால் நாட்டில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வந்தது.
‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் 9ம் தவணை ரூ.19,500 கோடி – பிரதமர் மோடி விடுவிப்பு!
ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா அவர்கள் நாட்டின் கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினசரி உயிரிழப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதலே 3ஆம் அலை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார். தினசரி பலி விகிதம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான 15 நாட்களில் அதிகரித்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது கொரோனா 3ஆம் அலை மோசமாகி வருவதையே காட்டுவதாக கூறுகிறார். பொதுவாக இன்று ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சமாக இருக்க வேண்டும். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 2ஆம் அலை ஏற்பட்ட போது, இது 2.2 வரை சென்றது. தற்போது மீண்டும் 1 ஐ விட அதிகரித்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.