இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா – 2,427 பேர் உயிரிழப்பு!!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,427 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 1,00,636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது. மத்திய சுகாதார அமைப்பு அரசுக்கு கொரோனா தடுப்பு பணிகளை செய்ய அறிவுரைகளை வழங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. ஊரடங்கிற்கு முன் தினசரி 4 லட்சமாக இருந்த தொற்று தற்போது 1,00,636 ஆக குறைந்துள்ளது. இது மக்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. தினந்தோறும் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன் படி கடந்த 24 மணிநேரத்தில் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,636 ஆக உள்ளது. மேலும் 2,427 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். மக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதாலும் தொற்று பரவல் குறைந்து வருகிறது எனவும் சுகாதாரத்துறை கூறுகிறது.
‘கோபி மீது சந்தேகப்படும் ராதிகா’ – எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர்!!
புதிதாக நாட்டில் 1,17,399 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை 2,71,59,180 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 14,01,609 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் மொத்த பாதிப்பு 2,89,09,975 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 3,49,186 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23,27,86,482 கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.